பிரச்னையை தீர்க்கும் திறன் எங்களுக்கு இருக்கு.. 3வது நாடு தலையிட வேண்டாம்.."டிரம்பை" நிராகரித்த சீனா
பெய்ஜிங்: இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் திறமை எங்கள் இரு நாடுகளுக்கும் உண்டு. எனவே இதில் 3ஆவது நாடு தலையிட்டு சமரசம் செய்யத் தேவையில்லை என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது, இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் பிரச்சினையை மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்த டிரம்பிற்கு சீனாவின் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவுடன் போர் தொடுக்கும் எண்ணத்துடன் சீனா, எல்லையில் போர் விமானங்கள், படைகளை குவித்து வருகிறது.
எந்த சூழல் வந்தாலும் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவும் தயாராக உள்ளது. இதனால் எல்லையில் தொடர்ந்து இரு வாரங்களுக்கு மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.

தீர்வு
இந்த பதற்றத்தைத் தணிக்க இந்தியா- சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக்கிடம் கேட்ட போது பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேசி வருகிறோம் என தெரிவித்தார்.

தீர்க்கும் திறன்
எனவே டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரிக்கிறது என்பது அவரது பதிலில் இருந்து மறைமுகமாக புரிந்து கொள்ள முடிகிறது. டிரம்பின் ஆஃபர் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில் எல்லையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் முறையாக தீர்க்கும் திறன் எங்கள் இரு நாடுகளுக்கும் (இந்தியா- சீனா) உள்ளது.

இந்தியா
சீனாவும் இந்தியாவும் எல்லை தொடர்பான சரியான வழிமுறைகளையும் பேச்சுவார்த்தை குழுக்களையும் கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தக் கூடியதே. எனவே மூன்றாவது நாடு தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை என்றார். அது போல் எல்லை பிரச்சினையில் சமரசம் செய்து வைப்பதாக டிரம்ப் கூறியதை அடுத்து அவருடன் பிரதமர் நரேந்திர மோடி போனில் பேசியதாக வந்த தகவலை இந்திய அரசு மறுத்துள்ளது.
Recommended Video

சீனா
இந்த நிலையில் இந்தியா - சீனா பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் நல்ல மூடில் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை ரத்து செய்த போதும் பாகிஸ்தானுடனான பிரச்சினையை தீர்த்து வைக்க டிரம்ப் முன்வந்தார். ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications