கொரோனாவிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கு பாஸ்.. சீனா அசத்தல் தகவல்
பீஜிங்: நீண்ட நேரம் மூக்குக் கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சீன மருத்துவமனை ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா நோயாளிகளைக் கொண்டு சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனை சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இவர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில், நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் கண்ணாடி
அதாவது ஒரு நாளைக்கு சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். சிலருக்கு அடிக்கடி முகம், கண்களை தொடும் பழக்கம் இருக்கிறது. கண்ணாடி அணிவதன் மூலம் கண்களை தொடுவது குறைகிறது. இதன் மூலம், கண்கள் வழியாக கொரோனா வைரஸ் செல்வது தடுக்கப்படுகிறது.

உறுதி
இதை மேலும் உறுதி செய்தவற்கு பல்வேறு ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இந்த ஒரு ஆய்வை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது'' என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக ஷீல்டு
இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்து இருக்கும் கருத்தில், ''இந்த ஆய்வுக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வின் மூலம் கொரோனாவில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள பொதுவெளியில் வரும்போது கண்ணாடி அல்லது முகத்தை மறைக்கும் வகையில் ஷீல்டு அணியலாம்'' என்றார்.

முந்தைய ஆய்வுகள்
கண்கள் வழியாகவும் கொரோன வைரஸ் மனித உடலுக்குள் செல்லும் என்று முந்தைய ஆய்வுகளும் கூறி இருந்தன. இந்த நிலையில்தான் இந்த ஆய்வும் வெளியாகியுள்ளது.

கண்களில் வைரஸ்
முகத்தை தொடும் போது அல்லது கண்களை தொடும்போது நமது கைககளில் இருக்கும் வைரஸ் கண்கள் வழியாக மனித உடலுக்குள் செல்லும் என்று கூறப்பட்டு வந்தது. இதனால் கைகளை முகத்தில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications