தென்சீனா கடலில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ரோந்து? சீனா கடும் எச்சரிக்கை
பெய்ஜிங்: தென்சீனா கடற்பரப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு ரோந்து மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதற்கு சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா; ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, தைவான், மலேசியா நாடுகள் தங்களுக்கும் சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகிறது.

செயற்கை தீவுகள்
இருப்பினும் சீனா ராணுவ பயன்பாட்டுக்காக 2 செயற்கையான தீவுகளை உருவாக்கியுள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அவ்வப்போது தென்சீனா கடலில் ரோந்து வருகிறது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கூட்டு ரோந்து பேச்சுவார்த்தை
இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளையும் கூட்டு சேர்ந்து கொண்டு ரோந்து மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்தியாவோ, ஐநாவின் கீழான பன்னாட்டு ராணுவத்தில் மட்டுமே சேருவோம் என மறுத்து வருகிறது.

சீனா எச்சரிக்கை
இந்த செய்திகள் வெளியான நிலையில் சீனா கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறியதாவது:

பிராந்திய அமைதிக்கு வேட்டு
தென்சீனா கடற்பரப்புக்கு தொடர்பே இல்லாத நாடுகள் இப்பிராந்தியத்தை ராணுவமயமாக்குவதை நிறுத்த வேண்டும். சுதந்திரமான போக்குவரத்து என்ற பெயரில் இப்பிராந்திய நாடுகளின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது. இது இந்த பிராந்தியத்தின் அமைதிக்கு வேட்டுவைப்பதாகும்.
இவ்வாறு ஹாங் லீ கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications