புலியை அடித்துச் சாப்பிட்ட சீனத்து "புலிப்பாண்டி" கைது... 13 வருடம் சிறைத் தண்டனை
பெய்ஜிங்: தனது பண பலத்தைக் காட்ட புலியைக் கொன்று அதன் கறியை நண்பர்களுக்கு விருந்தளித்த சீன வியாபாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவை சேர்ந்த வியாபாரி ஸு. பெரும் பணக்காரரான இவர் தனது நண்பர்களுக்கு அவ்வப்போது விருந்தளித்துள்ளார். அப்போது தனது பணபலத்தைக் காட்ட புலிக்கறியை உணவாக பரிமாறியுள்ளார். மேலும், தனது ஆண்மையைப் பெருக்க புலியின் ரத்தத்தை ஸூ மதுவாக குடித்து மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு மட்டும் ஸு 3 புலிகளை கொன்று சமைத்துச் சாப்பிட்டுள்ளார். இதற்கென சமூகவிரோத கும்பல் ஒன்றிடம் இருந்து சட்டவிரோதமாக திருடப்பட்ட புலிகளைப் பெற்றுள்ளார் ஸு.

புலி ஒன்றை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற ஸு அதன் இறைச்சியை வெட்டிக் கூறு போடும் வீடியோ ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதன் அடிப்படையில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் தனது குற்றத்தை ஸு ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஸு உள்பட 15 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஸுக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த 14 பேருக்கு ஐந்து முதல் ஆறரை ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஸு வீட்டில் போலீஸார் சோதனையிட்டபோது புலிக் கறி மட்டுமல்லாமல் ராஜநாகம் உள்ளிட்ட பல அரிய விலங்குகளையும் கூட அவர் சாப்பிட்டு வந்தது தெரிய வந்ததாம்.
புலிக்கறி சாப்பிடுவது என்பது உலக அளவில் மிகவும் அரியதாக பார்க்கப்படுகிறது. மேலும் புலிக்கறி கிடைப்பதும் குதிரைக் கொம்பானதாகும். அதிக செலவு பிடி்க்கும் விஷயமும் கூட. ஆனாலும் தனது பண பலத்தால் புலிக்கறியையும் சாப்பிட்டு விருந்தும் வைத்துள்ளார் இந்த ஸு. சீனாவில் சில பெரும் பணக்காரர்கள் புலிக்கறி சாப்பிடுவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் மொத்தமே 3200 புலிகள்தான் இருப்பதாக உலக வைல்ட்லைப் நிதியம் கணக்கு கூறுகிறது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில்தான் உள்ளன. இதுதவிர தாய்லாந்து, வட கிழக்கு சீனாவிலும் புலிகள் கணிசமாக உள்ளன. கடந்த நூற்றாண்டில் 97 சதவீதம் புலிகள், வேட்டை காரணமாக கொல்லப்பட்டு விட்டன. மேலும் வசிப்பிட இழப்பு காரணமாகவும் பல புலிகள் இடம் பெயர்ந்து உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications