சீனாவில் கொரோனா வைரஸுக்கு சூப்பர் க்யூர்? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் என்ற கோவிட் 19 வைரஸ் இதுவரை 34 ஆயிரம் மக்களை உலகம் முழுவதும் சாகடித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 724436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில் தான் 7ல் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 1.5லட்சம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஸ்பெயினில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின் 6800 பலி
மிக அதிகப்படியான உயிரிழப்பு என்பது இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. 10500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளார்கள். ஸ்பெயினில் அதற்கு அடுத்தபடியாக 6800 பேர் இறந்துள்ளார்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

சீன அதிரடி
ஆனால் உலகின் மற்ற நாடுகளில் கொரோனாவை எப்படி தடுப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றன. மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே பாதிப்பை தடுக்க முடியும் என்று உலகமே தவித்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நம்பிக்கை தரும் செய்தி வெளியிட்டுள்ளது.

நானோ பொருள்
அந்த செய்தியில், சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை எதிர்த்துப் புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். 96.5-99.9% செயல்திறனுடன் வைரஸை உறிஞ்சி செயலிழக்கச் செய்யக்கூடிய நானோ பொருளைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கூறுவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா தனது பாரம்பரிய மருந்து மூலம் கொரோனாவை தடுக்க பயன்படுத்தி வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

ஆராய்ச்சிகள் நடந்துள்ளது
இதனிடையே முடக்கு வாதத்திற்கு பயன்படுத்தும் மருந்து கொரோனா வைரஸ் சிகிச்சையாக சோதிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சையாக சனோஃபி மற்றும் ரெஜெனெரான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தங்கள் முடக்கு வாதம் மருந்தனா கெவ்ஸாராவினைவைத்து மருத்துவ பரிசோதனையை விரிவுபடுத்தியுள்ளன. மோனோக்ளோனல் ஆன்டிபாடி எனப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும் மருந்தான கெவ்ஸாராவை சோதனை செய்வது இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா மற்றும் ரஷ்யாவில் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications