கிரீஸை போல திவாலாக காத்திருக்கு சீனா.. இந்தியாவுக்கும் பொருளாதார நெருக்கடி!
பீஜிங்: கிரீஸ் நாட்டை தொடர்ந்து சீன பொருளாதாராம் அதளபாதாளம் நோக்கி பாய்ந்து கொண்டுள்ளது. சீன பங்கு சந்தையில் பெரும் சரிவு கண்டு வருவதால், அந்த நாட்டு கரென்சியான, யென், அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையாக குறைந்துள்ளது. இந்த நெருக்கடி, இந்திய பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர்.

பங்கு சந்தை சரிவு
ஷாங்காய் பங்கு சந்தையில் நேற்று திடீரென 8 சதவீதம் பங்கு மதிப்பு சரிந்தது. முன்னணி நிறுவனங்கள் எல்லாம் பங்கு பேரத்தை நடத்த தயங்கின. சுமார் 43 சதவீத கம்பெனிகள் (1249 நிறுவனங்கள்), இந்த சரிவால் பயந்து போய் பங்கு பேரத்தை மணிக்கணக்கில் நிறுத்தி வைத்தன. சீன பங்கு சந்தை சரிவை பார்க்கும்போது, கிரீஸ் போல இங்கும் பொருளாதார சரிவு ஆரம்பித்து விட்டதா என்ற எண்ணத்தை உருவாக்கியது.

இறங்கி வந்த சீனா
உலக நாடுகள் ஒத்துழைப்பை தவிர்த்து தன்னிச்சையாக செயல்பட விரும்பிய சீனா, 2008ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தத்தை தொடர்ந்து, ஒத்துழைப்பு கொடுக்க இறங்கி வந்தது. எனினும், உள்நாட்டு பங்கு வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் உஷாராக இருந்தது. ஆனால், அதிலும், இப்போது பெரும் அடி விழுந்துள்ளது.

முயற்சி வீண்
கடந்த ஒரு வாரமாக தள்ளாட்டத்தில் இருந்த சீன பங்குச் சந்தையில் நேற்று மட்டும் 8 சதவீதம் பங்கு மதிப்பு சரிந்தது. பங்குச்சந்தை சரிவை தடுக்க காப்பீட்டு கம்பெனிகள் தங்களின் 10 சதவீத பங்குகளை மற்ற கம்பெனிகளில் முதலீடு செய்தன. இருந்தும் பங்கு மதிப்பு சரிவை தடுக்க இது பெரிதும் பயன்படவில்லை. வெளிநாட்டு நிறுவன பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை திரும்ப பெறுவதை தடுக்க முடியவில்லை.

பண மதிப்பு சரிவு
பங்கு மதிப்பு சரிந்ததை தொடர்ந்து சீன யென் கரன்சி மதிப்பும் எதிர்பாராத சரிவை கண்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக யென் மதிப்பு சரிந்து வருவதும் சீன அரசுக்கு கவலையை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் முதலே சீன பொருளாதார நிலை தள்ளாடி வருகிறது. மொத்தத்தில் பங்கு சந்தையில் 30 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி காணப்படும் என்ற நிலை தான் இப்போது இருந்து வருகிறது.

இந்தியாவுக்கும் ஆபத்து
இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், கிரீசை விட ஆபத்தான நிலைமைக்கு, சீனா போய்க்கொண்டுள்ளது. சீனாவுடன் பல நாடுகளும் பொருளாதார தொடர்பை வைத்துள்ளன. அந்த நாடுகளுக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்தியாவை பொருத்தளவில், உள்நாட்டில் சந்தை பொருட்களின் விலைவாசி கட்டுக்குள் இருப்பது சாதகமான அம்சம். ஆனால், கிரீஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார சரிவு, இந்தியாவுக்கு இரட்டை அபாயம். இந்திய பண மதிப்பும் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications