தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு போதை கலாசாரத்தை பரவவிட்ட திமுகதான் காரணம்- விஜய் குற்றச்சாட்டு
திருச்சி: சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு என் மீது பழி போடுவதா? என திமுக, அதிமுகவை ஆவேசமாக முதல்வர் விஜய் விமர்சித்திருந்தார். திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல அங்கு சென்றிருந்த அவர் இவ்வாறு பேசினார்.
திருச்சி கிழக்கில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டம் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நிகழ்ந்தது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேசினார். அவர் பேசுகையில், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியில் இந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறோம்.
நிதி தொடர்பான எல்லா கதவுகளை திமுக அரசு லாக் செய்துவிட்டு போயிருக்கிறார்கள் (அதாவது கடன் வாங்கியது, கஜானா காலியை சொல்கிறார்,), அதை சரி செய்ய வேண்டாமா, ஒழுங்குப்படுத்த வேண்டாமா?
எனவே நான் மறுபடியும் சொல்றேன், இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்காக அரசியலுக்கு வரவில்லை, உங்களுக்கு நல்லது செய்வதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. கவலையே படாதீங்கள்!
அடுத்தது இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை! ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் அது சரியில்லை, இது சரியில்லை என திமுகவும் மற்றும் பலரும் மாறி மாறி கூவுறீங்க! நான் ஒன்று கேட்கிறேன், இந்த மாடல் அரசு மாடல் அரசுனு சொல்றீங்களே, அதுல என்ன செய்து வைத்துவிட்டு போயிருக்கீங்க!
ஒரு ஊரு விடாம, ஒரு தெரு விடாம சட்டம் போதை பொருள் கலாச்சாரம் அப்படியே பரவி கொட்டி கிடக்குது! அதை ஆரம்ப கட்டத்திலேயே கன்ட்ரோல் செய்திருந்தால் இத்தனை பெண்கள், குழந்தைகளை இழக்கும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்குமா?
எல்லாத்தையும் பண்ணிட்டு பழியை தூக்கி என் மேல போடுறீங்க! நீங்கள் என்ன பழி போட்டாலும் மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய செயலை இந்த விஜய் நிச்சயம் செய்வேன்.
அதற்காகத்தான் திறமையான காவல் துறை அதிகாரிகளை நியமித்துள்ளேன். பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை அடுத்த வாரம் தொடங்க போகிறோம்.
தவறு செய்தவர்கள் உடனே கைது செய்யப்படுகிறார்கள், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை உடனே தாக்கல் செய்யப்படும். நீதிமன்றத்திலும் தவறி செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதற்கான அத்தனை வேலைகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறோம். அதனால் நீங்கள் எந்த பழியை என் மீது போட்டாலும் உண்மையா, உறுதியா மக்களுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் இந்த விஜய் செய்து காட்டுவான் என முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.
விஜய் ஆட்சி பொறுப்பேற்று கடந்த 15 நாட்களில் 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றச் சம்பவங்களும் சட்டம் ஒழுங்கும் பிரச்சினைகளும் நடந்துள்ளன. தமிழகத்தில் 25 பேர் கொலை செய்யப்பட்டனர். அதில் 4 இரட்டை கொலை சம்பவங்களில் 8 பேர் பலியாகிவிட்டனர். கந்து வட்டி கொடுமையால் ஒருவரும் காவல் துறை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றொருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
இது மட்டுமின்றி 19 பாலியல் வன்கொடுமை. போக்சோ குற்றங்களும் 9 கொள்ளை, திருட்டுச் சம்பவங்களும் மது போதையால் ஏற்பட்ட 12 குற்றங்களும் 2 துப்பாக்கிச் சீடு, வெடிகுண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் போதை பொருள் தாக்கத்தாலேயே நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
-
Judge Mohana: உச்சநீதிமன்ற நீதிபதியானார்! தமிழகத்தின் முதல் பெண் மோகனா! விஜய் வாழ்த்து -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications