டென்மார்க் ஏர்போர்ட்டில் கிடந்த ‘மர்ம’ பார்சல்... வெடிகுண்டு பீதியால் பரபரப்பு
கோபன்ஹேகன்: கோபன்ஹேகன் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பார்சலில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டதால், அங்கிருந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் விமான நிலையத்தின் 3வது புறப்பாடு அருகே நேற்று மர்மபார்சல் ஒன்று கிடப்பதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மர்மபொருள் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
கடந்தவாரம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தவர். அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ள நகரங்கள் உள்ள பட்டியலில் கோபன்ஹெகன் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்நகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோபன்ஹெகன் விமான நிலையத்தில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications