கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அது போல் 14000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் பாதிப்பால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி இதுவரை 304 பேர் சீனாவில் பலியாகியுள்ளனர். மேலும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சீனா தனித்து விடப்பட்ட நாடாக மாறிவிட்டது.
சீனாவுக்கு பயணம் செல்வது ரத்து, விமான போக்குவரத்து ரத்து, சீனாவில் உள்ள மற்ற நாட்டவரை அந்தந்த நாட்டு அரசு தாயகம் அழைத்து செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் பொருளாதாரத்தில் உலகளவில் 2-ஆவது இடத்தில் உள்ள நாடான சீனா மிகவும் அபாயகரமான இடத்தில் உள்ளது.
இந்த வைரஸ் பாதிப்புக்காக உலக சுகாதார நிறுவனம் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் நேற்று சீனாவிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நேரடியாக வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 10 நாட்கள் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications