வுகான் சந்தையிலிருந்து கொரோனா உருவாகவில்லை.. புதிய ஆய்வுகளால் நீடிக்கும் குழப்பம்
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் வுகான் மார்க்கெட்டில் இருந்து வெளியேறவில்லை என புதிய ஆய்வுகளில் தகவல்கள் வெளியானதால் குழப்பம் எழுந்துள்ளது.
சீனாவில் வுகானில் உள்ள விலங்குகளின் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அந்த வைரஸ் உலக நாடுகளில் பரவத் தொடங்கியதும் அந்த வுகான் வெட் மார்க்கெட் சந்தை மூடப்பட்டது.
இந்த சந்தையிலிருந்து ஒருவர் கொரோனா வைரஸை மற்றவர்களுக்கு பரப்பியதாக கூறப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த வைரஸ் சுமார் 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இதனால் 57 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டு
எனினும் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது. இந்த வைரஸ் வுகானில் உள்ள வைரலாஜி பரிசோதனைக் கூடத்தில் இருந்து வேண்டுமென்றே கசியவிடப்பட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை வுகான் பரிசோதனை கூடம் அண்மையில் மறுத்தது.

அரசியல்
இந்த நிலையில் இந்த வைரஸ் பரவ தொடங்கியதும் வவ்வால் பெண் ஷீ ஜெங்லி மாயமானார். இதனிடையே அண்மையில் அந்த பெண் சீன தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் இந்த கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமான பிரச்சினை. ஆனால் இது அறிவியல் மற்றும் அரசியலாக்கப்படுகிறது என்று கூறினார்.

கொரோனா வைரஸ்
இந்த வைரஸ் வுகான் சந்தையிலிருந்து வெளியேறவில்லை என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி அமைப்பு தனது ஆய்வின் மூலம் வுகான் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையில் கொரோனா வைரஸ் உருவானது என்பதை மறுத்துள்ளது.
Recommended Video

வுகான் சந்தை
இதுகுறித்து தனது ஆய்வறிக்கையில் அந்த அமைப்பு கூறுகையில் வைரஸின் முதல் முதலாக தோன்றியது வுகான் சந்தையில் இருக்காது. அங்குள்ள விலங்குகளுக்கு கொரோனா உறுதியாகவில்லை. இது வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது. கொரோனா வைரஸ் வுகான் சந்தையில் தொற்றியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த வைரஸ் வுகான் சந்தையிலிருந்தும் பரவவில்லை, வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து பரவவில்லை என்றால் அது எங்கிருந்துதான் பரவியது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications