தினமும் 8 லி தண்ணீர், சிறிய பெட்ரூம், இமெயில் வசதி... ‘செவ்வாயில்' வாழ பயிற்சி பெறும் 6 பேர்!
வாஷிங்டன்: முன்னதாக தேர்வு செய்யப்பட்ட ஆறு பேருக்கு செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்காக எட்டு மாதப் பயிற்சியை நாசா துவக்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப் பட்ட கூண்டில் அவர்கள் தங்கியுள்ளனர்.
சர்வதேச அளவில் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாயில் மனிதனைக் குடியேற்ற வேண்டும் என்பதே அவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது.
அமெரிக்காவின் ‘நாசா' விண்வெளி மையம், வருகிற 2030-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கென மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதில் தேர்வான ஆறு பேருக்கு செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்கான பயிற்சிகளைத் தற்போது தொடங்கியுள்ளது நாசா.

டூம்...
இந்தப் பயிற்சியானது மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கென ஹவாய் தீவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆயிரம் சதுர அடியில் விசேஷ கூண்டு வடிவ ‘டூம்' உருவாக்கப்பட்டுள்ளது.
2 மாடி...
இந்த டூமானது 2 அடுக்கு மாடிகளையும் கொண்டது. அதில் 3 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 6 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
சிறிய படுக்கை அறைகள்...
மேலும், அவர்களுக்கு தனித்தனியாக 6 சிறிய படுக்கை அறைகள் அவற்றில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் அவர்கள் அங்கு தங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி எந்திரங்கள்...
அந்த டூமில் இருந்தபடியே அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள சைக்கிள், டிரட்மில் எந்திரம் ஆகியவற்றையும் நாசா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
8 லிட்டர் தண்ணீர்...
அதில் தங்கியுள்ள 6 பேருக்கும் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த 8 லிட்டர் தண்ணீரையே அவர்கள் குடிக்க, குளிக்க, சமைக்க, மற்றும் உடைகளை சுத்தம் செய்ய போன்ற அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
இமெயில் வசதி...
மேலும் அவர்கள் அங்கிருந்தபடியே தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இமெயில் அனுப்பும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு இமெயில் சென்றடைய 40 நிமிடங்கள் ஆகும். எனவே, அதன்படியே இந்த டூமிலும் இமெயில் வசதி செய்யப் பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் கருத்து....
இதன்படி, இனி வரும் எட்டு மாதங்களுக்கு வெளி உலகத் தொடர்பு என்பதே இல்லாமல் இந்த ஆறு பேரும் வாழப் போகிறார்கள். இப்பயிற்சியின் முடிவைக் கொண்டே செவ்வாயில் மனிதர்கள் வசிப்பது குறித்து தெளிவான முடிவுகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications