இறுக்கி கட்டி பிடித்து லிப் கிஸ்.. அடுத்த சில நொடிகளில் நேர்ந்த விபரீதம்.. துயரத்தில் முடிந்த இன்பம்
பாலத்தில் நின்று முத்தம் தந்த காதலர்கள் தவறி விழுந்து பலியானார்கள்
Recommended Video
லிமா: உச்சியில் உள்ள பாலத்தில் காதல் ஜோடி கட்டிப்பிடித்து கொண்டு முத்தம் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது, இருவருமே நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். பெரு நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேபெத் எஸ்பினாஸ் - ஹெக்ட்டார் இவர்கள் இருவரும் தீவிரமான காதலர்கள். பெத்தலஹேம் என்ற 60 அடி உயரமுள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். பாலத்தில் செல்லும்போதே நடுவில் ஒரு இடத்தில் நின்று இருவரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

அப்பொழுது ஹெக்ட்டார், தனது காதலியை தூக்கி பாலத்தின் தடுப்பு கம்பி மீது ஏற்றி உட்கார வைத்தார். பிறகு இருவருமே ஒரு கட்டத்தில் ஒருத்தருக்கொருவர் லிப் லாக் முத்தம் கொடுத்து கொள்ள ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் காதலி, ஹெக்ட்டாரை தன் காலுக்குள் இழுத்து கொண்டு வந்து வைத்து, உதட்டில் அழுத்தமாக முத்தம் தந்தார்.
அப்போது, இருவரும் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பிறகு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அது தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications