உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3லட்சத்தை எட்டியது.. அமெரிக்கா முதலிடம்
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3லட்சத்தை தாண்டி உள்ளது. இது வரை கொரோனா தொற்றால் 3,00,229 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் வெறும் 100 நாட்களில் 10லட்சம் பேரை பாதித்தது. அடுத்த 50 நாட்களில் 40 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 44,78,731 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 3,00,229 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 16,82,924 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர் 24,95,578 பேர் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகிலேயே அதிக பட்சமாக அமெரிக்காவில் 85463 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 1,436,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 272,646 பேர் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 27321 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் இதுவரை 252 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2035 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 233151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 33446 பேர் உயிரிழந்துள்ளனர்..
இத்தாலியில் 233151 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 31368 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 196158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13551 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் 174060 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 27074 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 79 ஆயிரம் பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1200 பேர் புதிதாக நோய்தொற்றால் பாதிக்கப்பபட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications