For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபுதாபியில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்ற இ.டி.ஏ.மேல்கோ அணி

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இ.டி.ஏ. மேல்கோ அணியும், எம்.எம்.சி. சி. அணியும் பங்கு பெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளி எடுத்த நிலையில் இறுதி மூன்றாவது இருபது ஓவர் போட்டி அபுதாபி சகாமா மைதானத்தில் 25/10/2016 அன்று நடைபெற்றது.

முதலில் எம்.எம்.சி.சி. அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பாக கார்த்திக் அதிகபட்சமாக 27 ரன்களும், சாந்து செய்யது 24 ரன்களும் எடுத்தார்கள். இ.டி.ஏ. மேல்கோ அணியின் சார்பாக பந்து வீச்சாளர் ராஜ்கபூர் மற்றும் உதுமான் தலா இரண்டு விக்கெட் எடுத்தார்கள்.

Cricket tournament held in Abu Dhabi

பின்னர் ஆடிய இ.டி.ஏ. மேல்கோ அணி 15 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து கோப்பையினை தட்டிச் சென்றது. அந்த அணியின் சார்பாக அதிகபட்சமாக கான் 52 ரன்களும், ரிபாய்தீன் 14 ரன்களும் எடுத்தார்கள்.

எம்.எம்.சி. சி. அணியின் சார்பாக தப்ரே ஆலம், இப்ராஹிம், சாம் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள். இந்த டோர்னமென்ட்டுக்கு கோப்பை ஸ்பான்சர் செய்த முஹம்மது ஹசன் மற்றும் யாஷ்யா மக்தூம் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக லாபிர் மற்றும் கார்த்திக் கலந்து கொண்டனர். இந்த போட்டியை சிறப்பாக நடத்தி தந்த பி.எஸ்.காஜா முஹைதீன், தப்ரே ஆலம் மற்றும் சாந்து செய்யதுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

English summary
Cricket tournament was held in Abu Dhabi in which ETA MELCO team emerged winner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X