துபாயில் கம்பம் ஜமாஅத் உதயம்: பேராசிரியர் முனைவர் மன்சூர் துவக்கி வைத்தார்
துபாய்: துபாயில் தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் இணைந்து கம்பம் ஜமாத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இதன் துவக்க நிகழ்ச்சி 15.11.2013 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அனீஸ் இல்லத்தில் நடைபெற்றது.

துவக்கமாக ஆஷிக் இறைவசனங்களை ஓதினார். நிகழ்விற்கு சையத் அப்தாஹிர் தலைமை வகித்தார். அவர் ஜமாஅத் அமைப்பு துவங்கப்படுவதன் நோக்கம் குறித்து விவரித்தார்.
கம்பம் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்கள் தனது சிறப்புரையில் தான் அமீரகம் வருகை புரிந்துள்ள நேரத்தில் கம்பம் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் ஜமாஅத் அமைப்பினை ஏற்படுத்தி தாயகத்தில் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட முனைந்திருப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் கம்பம் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் அனைவரையும் ஒரு சேர சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அனீஸ் நன்றி தெரிவித்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சையத் அப்தாஹிர், அனீஸ், ஹாதி, பாரி, சேக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்வில் தமீம், தாஹா, அப்துல் பாரி, முஹம்மது ஹாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அமீரக வாழ் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முஹம்மது தாஹா - 055 9379366 மற்றும் பாரி - 050 4960658 ஆகியோரை தொடர்பு கொண்டு ஜமாஅத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications