தீவிரவாதிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன: பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் 'வார்னிங்'
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகளின் நாட்கள் எண்னப்படுகின்றன என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் நேற்று இரவு நவாஸ் ஷெரீப் ஆற்றிய உரை:
பெஷாவர் பள்ளிக்கூடம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை இந்த மண்ணில் இருந்து வேரறுப்போம்.
பெஷாவர் தாக்குதல் நாட்டை உலுக்கியுள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும். இந்த நீதிமன்றங்கள் 2 ஆண்டுகள் கால வரம்பு கொண்டவையாக அமைக்கப்படும்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு அண்டை நாடுகளுடன் எந்த ஒரு தாக்குதல் நடத்துவதற்கும் தீவிரவாதிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் புதிய பெயரில் இயங்க அனுமதிக்க முடியாது.
இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.