ஆப்கான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு.. பள்ளி மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பெண்கள் பள்ளிக்கு அருகே நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கே சயீத்-உல்-சுஹாதா பெண்கள் பள்ளி உள்ளது. நேற்று மாலை இந்தப் பள்ளியில் இருந்து பெண்கள் வழக்கம்போல தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பள்ளியின் பார்கிங் பகுதியில் இருந்த காரில் இருந்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு குண்டுகள் அங்கு வெடித்தன. இதில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. மேலும், இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களுக்கும் பெரும்பாலும் 11-20 வயதுடைய பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் என்பது மற்றொரு அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.
பள்ளியில் நடைபெற்றுள்ள இந்தக் குண்டுவெடிப்பிற்கு தற்போதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேபோல இந்த குண்டுவெடிப்பிற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தலிபான்களும் விளக்கமளித்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் ஷியா ஹாசராஸ் பிரிவினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகச் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இஸ்லாமியப் பண்டிகையான ரம்ஜானுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications