ரீயூனியன் தீவில் 2வது முறையாக கரை ஒதுங்கிய விமான பாகம்: மலேசிய விமானமா?
பாரீஸ்: பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள ரீயூனியன் தீவில் இரண்டாவது முறையாக கிடைத்துள்ள விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது.
இந்திய பெருங்கடலில் ஆண்டுக் கணக்கில் தேடியும் விமானத்தின் பாகம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

தீவு
இந்திய பெருங்கடலில் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கடந்த வாரம் கரை ஒதுங்கியுள்ளது. அதை ஜானி பெக் என்பவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று மலேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்பும் கூட
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ரீயூனியன் தீவில் விமானத்தின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியதை இதே ஜானி பெக் கண்டுபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மொசாம்பிக்
இந்திய பெருங்கடலோரம் அமைந்துள்ள மொசாம்பிக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. அது மாயமான மலேசிய விமானத்தை போன்றே போயிங் 777 ரக விமானத்தினுடையது.

இரண்டு ஆண்டுகள்
மலேசிய விமானம் மாயமாகி நாளையுடன் இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றது. அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விமானம் குறித்து உறுதியாக எந்த தகவலும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications