இளகிய மனம் உள்ளவர்கள் இந்த செய்தியை படிக்கவோ, வீடியோவை பார்க்கவோ வேண்டாம்!
பெய்ரூட்: ஐஎஸ்ஐஎஸ் கொடிக்கு முன்பு நின்று கொண்டு 3 வயது கூட ஆகாத குழந்தை ஒன்று கரடி பொம்மையின் தலையை துண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் பலாத்தாரம் செய்கிறார்கள். அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் செக்ஸ் அடிமை சந்தையில் வேறு விற்பனை செய்கிறார்கள்.
6 முதல் 9 வயது வரை உள்ள சிறுமிகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.

சிறுவர்கள்
ஐஎஸ்ஐஎஸ் தீவரிவாதிகள் சிறுவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்து பிணையக் கைதிகளை சுட்டுக் கொல்ல வைத்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

குழந்தை
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் 3 வயது கூட ஆகாத சிறுவன் தீவிரவாதிகள் போன்றே கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியின் முன்பு கையில் கத்தியுடன் நிற்கிறான்.

கரடி பொம்மை
மனிதர்களின் தலையை எப்படி துண்டிப்பது என்று தீவிரவாதிகள் அந்த சிறுவனுக்கு கரடி பொம்மையை வைத்து கற்றுக் கொடுத்துள்ளனர். சிறுவன் கத்தியை வைத்து கரடி பொம்மையின் தலையை துண்டித்துவிட்டு சிரிக்கிறான்.
அதிர்ச்சி
பொம்மையை வைத்து விளையாட வேண்டிய வயதில் சிறுவன் பொம்மையின் தலையை கத்தியால் துண்டித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications