யாரும் என்னை போன்று கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிடாதீங்க: பில் கேட்ஸ்
நியூயார்க்: யாரும் என்னை போன்று கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிடாதீர்கள் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். கல்லூரியில் படித்து பட்டம் வாங்காவிட்டாலும் ஏராளமான பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்தவர். இந்நிலையில் அவர் படிப்பின் முக்கியத்துவம் குறித்து தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.
படிப்பு பற்றி கேட்ஸ் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது,

கல்லூரி
நான் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினாலும் சாப்ட்வேர் துறையில் அதிர்ஷ்டவசமாக எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

வேலை
கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுபவர்களுக்கு நல்ல வேலை, அதிக வருமானம் கிடைப்பதுடன் அவர்கள் பட்டம் பெறாதவர்களை விட நல்ல வாழ்க்கை வாழக்கூடும். அமெரிக்க பொருளாதாரம் மேம்பட பட்டதாரிகள் பேருதவி செய்கிறார்கள்.

படிப்பு
பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பட்டதாரிகள் அதிக அளவில் இல்லை. அதிகமானோர் கல்லூரிக்கு செல்லவில்லை என்பது பிரச்சனை இல்லை. கல்லூரிக்கு செல்பவர்களில் பலர் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகிறார்கள்.

ஆய்வுகள்
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கையை குறைக்க என்ன செய்வது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஏதாவது செய்வது நல்லது. கல்லூரி படிப்பு முக்கியம் என்று இரண்டு ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை நான் அண்மையில் தெரிவித்திருந்தேன் என்று எழுதியுள்ளார் கேட்ஸ்.

அறக்கட்டளை
பில்கேட்ஸ் மற்றும் அவரது அறக்கட்டளை கல்லூரி படிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஒபாமா அரசும் கல்லூரி படிப்பை முடிப்பதன் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications