கடைசியை தடையையும் தாண்டினார்.. அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வானார் டொனால்ட் ட்ரம்ப்!
வாஷிங்டன்: கடந்த மாதம் 8ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டனர்.
இதில் குடியரசு கட்சி, 276 இடங்களில் வெற்றி பெற்றது. ஜன நாயகக் கட்சி 218 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து, 'எலக்ட்ரோல் காலேஜ்' என்னும் தேர்தல் சபை உறுப்பினர்கள் இணைந்து, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை முறைப்படி தேர்வு செய்வார்கள். அதன்படி இன்று நடந்த வாக்கெடுப்பில் அதிபர் பதவிக்கு தேவையான 270 வாக்குகளைப் பெற்றுவிட்டார் டொனால்ட் ட்ரம்ப்.

இதையடுத்து 45-வது அமெரிக்க அதிபராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி அமெரிக்க காங்கிரசின் இரு அவை கூட்டத்தில் இது முறைப்படி அறிவிக்கப்படும். 20ம் தேதி அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் பதவியேற்பார்கள்.
சில நேரங்களில் எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் மாறிப்போய் எதிரணி வேட்பாளரை தேர்ந்தெடுத்த சரித்திரமும் உண்டு என்பதால் பரபரப்பு நிலவியது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப்தான் இதில் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications