டிரம்ப் இறங்கி வந்து.. போனை போட்டும்.. வேலையை காட்டிய புடின்.. முற்றிய மோதல்.. ரஷ்யாவின் புது மூவ்!
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புடினிடம் அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் போன் மூலம் பேசி உள்ளார். ஆனால் இந்த போன் காலுக்கு பின் நடந்த சில சம்பவங்கள் அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்; நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன். அதோடு நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.

நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றி அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம், என்று டிரம்ப் உறுதிமொழி ஏற்றுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேசி, உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்.. இதற்கு மேல் போரை அதிகரிக்க கூடாது. தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் . அதோடு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த போன்கால் சுமார் 15 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.
குழப்பம்: ஆனால் இந்த போன் காலுக்கு பின் நடந்த சில சம்பவங்கள் அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அதன்படி டொனால்ட் டிரம்ப் இறங்கி வந்து பேசியும் கூட நேற்று இரவோடு இரவாக ரஷ்யாவும் உக்ரைனும் மோதலில் ஈடுபட்டு உள்ளது. இரண்டு நாடுகளும் மாறி மாறி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளன.
ரஷ்யா உக்ரைன் மீது 145 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. அதே நேரத்தில் உக்ரைன் ரஷ்யாவை 45 ட்ரோன்களால் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் இரண்டு தரப்பிலும் விமான நிலையங்கள் மூடப்பட்டன. டிரம்ப் இறங்கி வந்து போனில் பேசியும் கூட நேற்று தாக்குதல் நிறுத்தப்படாமல் புதிய தாக்குதல்கள் நடந்துள்ளன.
விஸ்வரூப மோதல்: அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.
சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications