காங்கோவில் இனக்கலவரம்: சர்ச்சில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது நடந்த தாக்குதலில் 37 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கின்ஷசா: காங்கோ நாட்டின் கிழக்கு ஜனநாயக குடியரசில் நேற்று இரவு ஏற்பட்ட இனக்கலவரத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 37 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காங்கோவின் புகாவு நகருக்கு தெற்கேயுள்ள முட்லேருவில் நடண்டஹ் போதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பபுலிரு இனத்தைச் சேர்ந்த மக்கள் அருகிலுள்ள சர்ச் ஒன்றில் இரவில் தங்கியிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பாருண்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 13 ஆண்களும், 14 பெண்களும், 10 குழந்தைகள் மற்றும் ஒரு காவலரும் உயிரிழந்ததாக அப்பகுதியை சேர்ந்த குடியுருப்புவாசி ஒருவர் தெரிவித்தார். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அங்கு சேவை செய்து வரும் ஐ.நா. பணியாளர்கள் கூறுகையில், ‘பபுலிரு இனத்தினருக்கும், பாருண்டி இனத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது' எனத் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக இவ்விரு இனத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நிலம் மற்றும் சுங்க வரி தொடர்பான மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+