Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்: அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியப் பெண் துணைத் தூதர் தேவ்யானி மீது தொடரப் பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதராக பணியாற்றிய தேவ்யானியை விசா மோசடி குற்றத்திற்காக பொது இடத்தில் வைத்து கைது செய்தது அமெரிக்கா. மேலும், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்தும் அவமரியாதை செய்தனர் அமெரிக்கப் போலீசார்.

Drop case against Devyani : PIOs to obama

இந்தியத் துணைத் தூதர் இவ்வாறு நடத்தப் பட்டது இந்தியாவையே அவமானப் படுத்தும் செயல் என இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலு, இச்செயலுக்காக அமெரிக்கா தனது மன்னிப்பைக் கோர வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தது.

ஆனால், தொடர்ந்து தனது செயலுக்கு அமெரிக்கா நியாயம் கற்பித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தேவயானி மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு இணையதளம் வழியாக கோரிக்கை விடுத்துள்ளனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள்.

தேவயானியை கைது விவகாரம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்காவின் நடவடிக்கையை எற்றுக் கொள்ள முடியாது எனவும், தேவ்யானியிடம் நடந்து கொண்ட விதம் விரோதப் போக்கில் செயல்படுவதைக் காட்டுவதாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தக் கைது நடவடிக்கையால் இரு நாட்டு உறவில் சிக்கலை ஏற்படும். எனவே தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+