துபாயில் பெரும் பணக்காரர்கள் பகுதியை தாக்கிய டிரோன்கள்.. குறி வைத்து அடித்த ஈரான்.. பதற்றம்!
துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வெடித்த மோதல் இப்போது பிராந்திய மோதலாக மாறும் அபாயத்தில் இருக்கிறது. வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே துபாயில் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்து ஈரான் இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானை மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. தாக்குதலின் முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இருந்தபோதிலும் மோதல் முடிவுக்கு வரவில்லை. தனது தலைமையைக் கொன்றதால் ஆத்திரமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், ராணுவ முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரான் படைகள் தாக்குதல்
இதற்கிடையே இன்று துபாயைக் குறிவைத்தும் ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று வியாழக்கிழமை துபாய் நகரின் மையப்பகுதியில் டிரான் தாக்குதல் நடந்துள்ளது. துபாயில் சூப்பர் ரிச் எனப்படும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் டவுன் டவுன் (Downtown) பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது துபாயில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இதனைத் துபாய் அதிகாரிகள் "சிறிய ட்ரோன் சம்பவம்" என்றே குறிப்பிடுகிறார்கள். திடீரென ஏதோ ஒரு டிரோன் வந்து தாக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்
டவுன் டவுன் பகுதியில் தாக்குதல் நடந்துள்ளதைத் துபாய் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. அது மேலும், “அல் பதா பகுதியில் நடந்த இந்த சிறு ட்ரோன் சம்பவத்திற்குப் பிறகு துபாய் அதிகாரிகள் சீரமைப்பு பணிகளில் இறங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு காயம் எதுவும் ஏற்படவில்லை" என்றனர்.
என்ன நடந்தது
இருப்பினும், டிரோன் வந்து விழுந்ததால் அல் பதா குடியிருப்புப் பகுதியில் எழுந்த சிறிய புகை மேகங்கள் சற்று நேரத்தில் மறைந்தன என அங்கிருந்த சர்வதேச ஊடகத்தினர் தகவல் தெரிவித்தனர். மத்திய கிழக்குப் போர் பிப்ரவரி 28 அன்று தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்கவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதி முழுக்க ஈரான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள், 11 பொதுமக்கள் உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதல்
இன்று முன்னதாக, துபாய் கடற்கரை அருகே பாரசீக வளைகுடாவில் ஒரு சரக்குக் கப்பல் திடீரென தாக்கப்பட்டது. கப்பலில் கூட சிறிய அளவு தீ ஏற்பட்டது. உடனடியாக கப்பலில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த தகவலை பிரிட்டன் ராணுவத்தின் யு.கே. மாரிடைம் டிரேட் ஆபரேஷன்ஸ் சென்டர் உறுதி செய்தது. அதேபோல பஹ்ரைனில், ஈரான் தாக்குதலால் முஹர்ராக் தீவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இங்கு தான் அந்த நாட்டின் சர்வதேச விமான நிலையம், ஜெட்புயல் மற்றும் எண்ணெய் கிணறுகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
வளைகுடா நாடுகள்
ஈரான் ட்ரோன் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி இருவர் காயமடைந்ததாக குவைத் பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்தது. துபாயைப் பாதுகாக்க ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை இருமுறை வான் பாதுகாப்பைச் செயல்படுத்தியது. அதேபோல சவுதி அரேபியாவைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை ஆரம்பித்தது. ரியாதின் தூதரகப் பகுதியை நோக்கிப் பாய்ந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தப்பட்டது.. ஷைபா எண்ணெய் வயலைத் தாக்க முயன்றது உட்படக் கிழக்குப் பகுதிகளில் பல ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்!












Click it and Unblock the Notifications