அமெரிக்கா பெயரை சொல்லாமல்.. வெனிசுலா குறித்து பேசிய ஜெய்சங்கர்! இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்
லக்ஸம்பர்க்: வெனிசுலா விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவை வெளிப்படையாக கண்டித்து வருகின்றன. ஆனால், இந்தியா மட்டும் இந்த விஷயத்தை தொட்டும், தொடாமலும் நகர்ந்து செல்கிறது. இந்நிலையில், லக்ஸம்பர்க் நகரில் வெனிசுலா நிலைமை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, "ஆம், வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரை ஒரே நிலையை எட்ட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பல ஆண்டுகளாக நல்லுறவு கொண்டிருந்த வெனிசுலா மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு நெருக்கடி
வெனிசுலாவுக்கும் இந்தியாவுக்குமான உறவு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தது. இருப்பினும், அமெரிக்காவின் எண்ணெய் தடை காரணமாக இந்த உறவு பாதிக்கப்பட்டது. இப்போது வெனிசுலாவில் இருந்து நாம் பெரிய அளவுக்கு எண்ணெய் வாங்குவதில்லை. அதேநேரம் அமெரிக்காவின் வரியும் இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பின்னலாடை நகரங்கள் சீக்கிரமே பாதிப்பை சந்திக்கும். ஏற்கெனவே பெறப்பட்ட ஆடர்களுக்கான உற்பத்தி விரைவில் முடிவடையும். இது முடிந்தால் புதிய உற்பத்தி அப்படியே சரியும்.
பிரிக்ஸ் நாடுகள்
அதேபோல, இந்தியாவின் பல நகரங்கள் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை பெரிய அளவில் நம்பியிருக்கின்றன. எனவே அமெரிக்காவுடன் சுமூகமாக போனால் மட்டுமே வரி விஷயத்தை சமாளிக்க முடியும். எனவேதான் அமெரிக்காவை இந்தியா வெளிப்படையாக கண்டிக்கவில்லை. ஆனால் இது பிரிக்ஸ் அமைப்பில் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் வெளிப்படையாகவே அமெரிக்காவை தாக்கி பேசியிருக்கின்றன.
அழைப்பு விடுத்த இந்தியா
இந்தியா மட்டும்தான் அமெரிக்கா என்கிற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் இருக்கிறது. இந்நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக ஜெய்சங்கர் பேசியிருக்கிறார். லக்ஸம்பர்க் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் சேவியர் பெட்டலுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். முன்னதாக, ஜன.4ம் தேதி வெளியுறவு அமைச்சகம் வெனிசுலாவின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி, அமைதியான தீர்வுக்கு அழைப்பு விடுத்திருந்தது. நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் அது குறிப்பிட்டது.
பேச்சுவார்த்தை வேண்டும்
வெனிசுலா மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியா மீண்டும் ஆதரவு தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், பிராந்திய அமைதியை உறுதி செய்ய பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது. வெனிசுலா தலைநகரான கராகஸில் உள்ள இந்திய தூதரகம் இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் கூறியிருந்தது.
அவசர உதவி எண்
ஜன.3ம தேதி வெளியுறவு அமைச்சகம், இந்திய குடிமக்களுக்கான ஆலோசனையை வெளியிட்டது. வெனிசுலாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அங்குள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவரச உதவிக்கு 58-412-9584288 (WhatsApp) என்கிற எண் மூலம், கராகஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர் -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications