டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை
டோங்கா: பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் பிளந்துள்ளன. தற்போது வரை 1,600க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அதேபோல் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு பலி குறைவாக உள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது தாய்லாந்து, வங்கதேசம், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. மியான்மரில் இன்று 3 வது நாளாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நிலநடுக்கங்கள் என்பது சக்தி குறைந்து இருந்ததால் மேற்கொண்டு பெரிய சேதம் ஏற்படவில்லை.
இருப்பினும் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மியான்மரில் சிக்கிய பலரும் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. இந்த சோகத்துக்கு நடுவே தான் இன்று டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் என்பது ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த டோங்கா தீவு என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பாலினேசியன் என்ற ராஜ்யத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த டோங்கா தீவு என்பது ஆஸ்திரேலியாவி்ன கிழக்கு கடற்கைரயில் சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த டோங்கா தீவு என்பது மொத்தம் 170 தீவுகளை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு மொத்தம் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்
இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் சார்பில், ‛‛டோங்கா தீவில் இன்று 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் என்பது பன்காய் கிராமத்தில் இருந்து தென்கிழக்கு பகுதியில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நிய் என்ற தீவு நாட்டுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அந்த தீவை சுற்றிய 300 கிலோமீட்டர் தொலைவுக்கு ராட்சத அலைகள் உருவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம், ‛‛சுனாமி எச்சரிக்கை காரணமாக டோங்கா தீவை சுற்றிய பகுதிகளில் 0.3 முதல் 1 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பலாம். இந்த ராட்சத அலை என்பது நிய் தீவின் சில இடங்களிலும் உருவாகலாம்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோங்காவை பொறுத்தவரை நிலநடுக்கம் என்பது சாதாரணமான ஒன்றாகும். அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. இப்போது நிலநடுக்கத்துடன் சுனாமி எச்சரிக்கை காரணமாக டோங்கா நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை செய்துள்ளார். மக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டும். கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற வேண்டும். மேடான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று டோங்கா பேரிடர் நிர்வாக அலுவலகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் கூட தற்போது வரை சேதம் குறித்த எந்த தகவலும் வரவில்லை.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications