ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிதமான நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை இல்லை
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்கு எல்லைப் பகுதியில் இன்று காலை 7.41 அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. கவாசாகி நகரை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என ஜப்பான் புவியியல் ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் எதிரொலியாக டோக்கியோ- ஒடவாரா நகர்களுக்கு இடைப்பட்ட புல்லட் ரயில் சேவை சிறிதுநேரம் தடைபட்டது.
இது தவிர நிலநடுக்கத்தால் பெரும் பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications