சொத்துக்களை முடக்கினால் கடனை திருப்பி தருவது கஷ்டமாகிவிடும்.. எச்சரிக்கிறாரா மல்லையா?
லண்டன்: பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவருக்கு சொந்தமான ரூ.1411 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விஜய் மல்லையா விடுத்துள்ள அறிக்கை: தனக்கு எதிராக ஒருதலைப்பட்சமான விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியில் பெற்ற கடன் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை. வர்த்தக ரீதியில் இழப்பு ஏற்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்தும், தலைமறைவுக் குற்றவாளி என அறிவிக்க நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது ஏன்?.

இந்த விவகாரத்தில் சிபிஐ சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்திருப்பது வேதனை அளிக்கிறது. சிவில் வழக்கான இதை, கிரிமினல் நடவடிக்கைகளோடு இணைத்து விசாரணை நடக்கிறது. எனது சொத்துக்களை முடக்கியுள்ளதால் வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதில் எனக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ள்து. கடன் தொகையை ஒரே தவணையில் செலுத்த ஏதுவாக பேச்சு நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு மல்லையா தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கும் என அறிந்து மல்லையா அவசரமாக சில சொத்துக்களை விற்பனை செய்து மண்ணை தூவியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications