யு.ஏ.இ: 2 புற்றுநோயாளி குழந்தைகளுக்காக துபாய் ஜிங்கிள்ஸ் காரோல்
துபாய்: ஆமீரகத்தில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரத்த புற்றுநோயால் அவதிப்படும் இரண்டு குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்ட துபாயில் கிறிஸ்துமஸ் காரோல் செல்கின்றனர்.
அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் சேர்ந்து அமைத்துள்ள குழு துபாய் ஜிங்கிள்ஸ். இந்த குழு ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காரோல் செல்வது வழக்கம். அதாவது கிறிஸ்துவ பாடல்களை பாடிக் கொண்டு வீடுகளுக்கு சென்று வாழ்த்துவார்கள். இந்த ஆண்டு அந்த குழு ரத்த புற்று நோயால் அவதிப்படும் இரண்டு குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்ட காரோல் செல்கிறது.
இது குறித்து துபாய் ஜிங்கிள்ஸை சேர்ந்த ராஜீவ் டேவிட் கூறுகையில்,
நாங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் என 36 பேர் இந்த குழுவில் உள்ளோம். நாங்கள் கிறிஸ்துமஸ் காரோல் பாடல் பாடுவதில் விருப்பம் உள்ளவர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக காரோல் செல்வோம். உடல் பாகங்கள் செயல் இழந்த சுனில் பிண்டோ என்பவருக்காக கடந்த ஆண்டு காரோல் சென்று ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் நிதி திரட்டி அவருக்கு அளித்தோம்.
இந்த ஆண்டு துபாய் மருத்துவமனையில் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் தவ்ஜான் உஷுரோவ்(4) மற்றும் அம்மார் இப்ராஹிம் அலி(3) ஆகியோரின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுகிறோம்.
அந்த குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு தலா ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. சிகிச்சை மூலம் அவர்கள் குணமடைய 95 சதவீத வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம்.
நாங்கள் பாட்டு பாட வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்போரின் வீடுகளுக்கு மட்டுமே நாங்கள் செல்கிறோம். நாங்கள் வார இறுதி நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை காரோல் செல்வோம். உஷுரோவ் மற்றும் அலிக்காக ஒரு வார இறுதியில் மட்டும் ரூ.5 லட்சம் நிதி திரட்டியுள்ளோம் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications