9/11 தீவிரவாத தாக்குதல்.. இதுவரை வெளிவராத அதிர்ச்சி படங்களை வெளியிட்டது எப்.பி.ஐ
அல்கொய்தா தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனமாக எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதியன்று அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான அரிய புகைப்படங்களை தற்போது எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அடையாளமாக திகழ்ந்த இரட்டை கோபுர கட்டடமான உலக வர்த்தக மையத்தின் மீது விமானங்களை மோதச் செய்து அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.
|
பெண்டகன் தாக்குதல்
அதே நாளில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் மீதும் தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு, தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதல் சம்பவங்களில் பல்லாயிரக்கணக்கோனோர் உயிரிழந்தனர்.
|
மிகப்பெரிய அவமானம்
பெண்டகன் மீது தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் அமைந்தது. அமெரிக்க ராணுவ தலைமையகம் தாக்கப்பட்டதால், அந்நாடு மிகப்பெரிய அவமானமாக கருதியது.

பின்லேடன் வேட்டை
இந்த தீவிரவாத தாக்குதல்கள் அமெரிக்கா பாதுகாப்பில் மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் மீதான பார்வையையும் பிடியையும் அமெரிக்கா இருக்கியது. இந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடனை 10 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.

தீவிரவாத தாக்குதல் புகைப்படங்கள்
இரட்டை கோபுர தாக்குதல், பெண்டகன் தாக்குதல் சம்பவம் நடைபெற்று 16 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த நிலையில், பெண்டகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான புதிய புகைப்படங்களை எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.
|
சிதைந்த கட்டடம்
எப்.பி.ஐ வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சிதைந்த கட்டங்களும், உருகிய வாகனங்களும் உள்ளன. விமானத்தின் சிதைந்த பாகங்களும் பெண்டகன் கட்டடத்திற்குள் சிதைந்து கிடக்கின்றன. இந்த புகைப்படங்களை தற்போது வெளியிடப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்ப் நடவடிக்கை
பயங்கரவாதிகள் மீதான பார்வையையும், பிடியையும் டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் பெண்டகன் தீவிரவாத தாக்குதல் தொடர்பான புகைப்பாடங்களை வெளியிட்டு பயங்கரவாதிகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது எப்.பி.ஐ
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications