பிடல் காஸ்ட்ரோவின் இறுதி அஞ்சலி: உலகத் தலைவர்கள் பங்கேற்பு!
கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இன்று இறுதி அஞ்சலி நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஹவானா : கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கடந்த 26ஆம் தேதி தனது 90 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இன்று நடைபெறும் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பெரும் புரட்சியாளரான காஸ்ட்ரோ சுமார் 50 ஆண்டுகள் கியூபாவின் அதிபராக ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்.

தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுக்கு காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார்.
630 முறைக்கு மேல் கொலை முயற்சிகளில் இருந்து அதிர்ஷ்டவமாக தப்பியவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு பெரும் எதிரியாக இருந்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 25 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
காஸ்ட்ரோவின் ஆசைப்படி அன்றே அவரது உடல் எரியூட்டப்பட்டது. இதையடுத்து அவரது அஸ்தி நாடு முழுவதும் கேரவன் மூலம் 900 கிலோ மீட்டர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
காஸ்ட்ரோவின் மறைவுக்கு அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். காஸ்ட்ரோவின் பிரிவால் வாடும் அந்நாட்டு மக்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது அஸ்தி இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த இறுதி அஞ்சலியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
பிரமாண்ட இறுதி ஊர்வலத்தை தொடர்ந்து சாண்டியாகோ நகரில் உள்ள சான்ட்டா இபிஜெனியா கல்லரையில் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி அடக்கம் செய்யப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications