அரசு குழந்தைகள் காப்பகத்தில் கலவரத்தால் வைக்கப்பட்ட தீ - 35 சிறுமிகள் கருகி சாவு
கவுதமாலா நாட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அங்கு தீ வைக்கப்பட்டதில் 253 சிறுமிகள் உயிரிழந்தனர்.
சான்ஜோஸ் பினுலா: கவுதமாலா நாட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு தீ வைக்கப்பட்டது. இதில் 35 சிறுமிகள் கருகி உயிரிழந்தனர்.
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் சான் ஜோஸ் பினுலா நகரில் அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர்களும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 400 பேர் மட்டுமே தங்கும் வசதியுள்ள இந்த காப்பகத்தில் அதை விட மிக அதிக எண்ணிக்கையில் சிறுவர், சிறுமியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கலவரத்தால் வைக்கப்பட்ட தீ
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அங்கு தங்கி இருந்த இளைஞர்கள் திடீர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காப்பகத்தில் இருந்த மெத்தைகளுக்கு தீ வைத்து விட்டு தப்பியோடிதாக தெரிகிறது.
சிதறி ஓடிய சிறுமிகள்
இந்த காப்பகம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் பீதியடைந்த சிறுமிகள் நான்கு புறமும் சிதறி ஓடினர். இருப்பினும் அவர்கள் மீதும் தீ பற்றியது.
35 சிறுமிகள் கருகி பலி
இதில் 35 சிறுமிகள் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தனர். அவர்கள் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள் அடையாளம் காண இயலாத வகையில் கரிக்கட்டைகள் ஆகி விட்டன.
50 பேர் படுகாயம்
சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். சில துடிப்பான குழந்தைகள் உடனடியாக அங்கிருந்து தப்பி, உயிர் பிழைத்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
3 நாள் தேசிய துக்கம்
அந்த கொடிய சம்பவத்துக்கு அந்த நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 நாள் தேசிய துக்கமும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கவுதமாலா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications