அரசு குழந்தைகள் காப்பகத்தில் கலவரத்தால் வைக்கப்பட்ட தீ - 35 சிறுமிகள் கருகி சாவு
கவுதமாலா நாட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அங்கு தீ வைக்கப்பட்டதில் 253 சிறுமிகள் உயிரிழந்தனர்.
சான்ஜோஸ் பினுலா: கவுதமாலா நாட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு தீ வைக்கப்பட்டது. இதில் 35 சிறுமிகள் கருகி உயிரிழந்தனர்.
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் சான் ஜோஸ் பினுலா நகரில் அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர்களும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 400 பேர் மட்டுமே தங்கும் வசதியுள்ள இந்த காப்பகத்தில் அதை விட மிக அதிக எண்ணிக்கையில் சிறுவர், சிறுமியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கலவரத்தால் வைக்கப்பட்ட தீ
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அங்கு தங்கி இருந்த இளைஞர்கள் திடீர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காப்பகத்தில் இருந்த மெத்தைகளுக்கு தீ வைத்து விட்டு தப்பியோடிதாக தெரிகிறது.
சிதறி ஓடிய சிறுமிகள்
இந்த காப்பகம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் பீதியடைந்த சிறுமிகள் நான்கு புறமும் சிதறி ஓடினர். இருப்பினும் அவர்கள் மீதும் தீ பற்றியது.
35 சிறுமிகள் கருகி பலி
இதில் 35 சிறுமிகள் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தனர். அவர்கள் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள் அடையாளம் காண இயலாத வகையில் கரிக்கட்டைகள் ஆகி விட்டன.
50 பேர் படுகாயம்
சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். சில துடிப்பான குழந்தைகள் உடனடியாக அங்கிருந்து தப்பி, உயிர் பிழைத்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
3 நாள் தேசிய துக்கம்
அந்த கொடிய சம்பவத்துக்கு அந்த நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 நாள் தேசிய துக்கமும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கவுதமாலா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications