கார்டினல் பதவி பெறும் முதல் தலித்... 2 இந்திய பேராயர்களை தேர்வு செய்த போப் பிரான்சிஸ்
வாடிகன்: போப் பிரான்சிஸால் கார்டினலாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ள 21 பேராயர்களில் 2 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
வாடிகன் தேவாலயத்தில் போன் பிரான்சிஸ் தலைமையில் நேற்று ரெஜினா செலி பிரார்த்தனை நடைபெற்று உள்ளது.
அப்போது புதிய கார்டினல்களை தேர்வு செய்யும் நிகழ்வை ஆகஸ்டு 27 ஆம் தேதி நடத்தலாம் என போப் பிரான்சிஸ் தெரிவித்து இருக்கிறார்.

புதிய கார்டினல்கள்
புதிதாக தேர்வு செய்யப்பட இருக்கும் கார்டினல்களில் 8 பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். 6 பேர் ஆசியாவையும், 2 பேர் ஆப்பிரிக்காவையும், ஒருவர் வட அமெரிக்காவையும், 4 பேர் மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். தற்போது 208 கார்டினல்கள் உள்ளனர். அவர்களில் 117 பேர் தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டவர்களாகவும், 91 பேர் தேர்வு செய்யும் அதிகாரம் அற்றவர்களாகவும் உள்ளனர்.

2 இந்தியர்கள்
புதிய கார்டினல்கள் நியமனம் செய்யப்பட்டால் மொத்த எண்ணிக்கை 229 ஆகவும், அவர்களில் 131 பேர் தேர்வாளர்களாகவும் இருப்பார்கள். புதிதாக தேர்வு செய்யப்படப்போகும் ஆசியாவை சேர்ந்த 6 பேரில் 2 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஒருவர்
கோவா பேராயர் பிலிப் நெரி ஆண்டோனியோ செபாஸ்டினோ டி ரொசாரியா பெராவ். மற்றொருவர் ஐதராபாத் பேராயர் அந்தோனி பூலா.

அந்தோனி பூலா
ஐதராபாத் பேராயர் அந்தோனி பூலா 1961 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்ணூலில் உள்ள சிந்துகுர் என்ற கிராமத்தில் பிறந்தவர். கர்ணூலில் உள்ள மதப்பள்ளியில் படிப்பை தொடங்கிய அந்தோனி, பெங்களுருவில் இருக்கும் புனித பீட்டர் பாண்டிபிகல் மதப் பள்ளியில் மேல் படிப்பை நிறைவு செய்தார். ஆந்திராவின் பட்டியல்/பழங்குடியின ஆணையரகத்தில் பணியாற்றி இருக்கிறார்.

முதல் தலித் கார்டினல்
அந்தோனி 1992 ஆம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு கர்ணூல் பேராயராக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐதராபாத் தலைமை பேராயராக அந்தோனி பூலா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியாவிலிருந்து கார்டினல் அந்தஸ்து பெறும் முதல் தலித் என்ற பெருமையை பெறுகிறார் அந்தோனி பூலா. தலித்துகளின் துயரங்களையும் தான் இளம் வயதில் பட்ட கஷ்டங்களையும் பேசி வரும் அந்தோனி, தலித் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் அந்தோனி பூலா.

ரொசாரியா பெராவ்
பேராயர் ரொசாரியா பெராவை பொறுத்தவரை கோவா தலைநகர் பனாஜி அருகே அமைந்துள்ள அல்டோனா கிராமத்தில் பிறந்தவர். தனது மத கல்வியை சாலிகோவில் உள்ள அவர் லெடி மத பள்ளியில் பயின்று இருக்கிறார். அதன் பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாபல் மத பள்ளியில் பயின்றதாக பனாஜியில் உள்ள பேராயர் மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல மொழிகளை அறிந்தவர்
தத்துவம் மற்றும் இறையியல் படித்துள்ள பெராவ், ஆங்கிலம்,கொங்கானி, போர்ச்சுகீஸ், இத்தாலியன், பிரென்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளை சரளமாக பேசுபவர் பெராவ். கடந்த 1979 ஆம் ஆண்டு கோவா மற்றும் டாமனின் பாதிரியாராகவும், 2003 ஆம் ஆண்டு கோவா மற்றும் டாமனின் தலைமை பேராயராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications