மெக்சிகோ நைட் கிளப்பில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. 5 பேர் பலி..12 பேர் படுகாயம்
மெக்சிகோ நைட் கிளப்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தி
மெக்சிகோ: மெக்சிகோ நைட் கிளப்பில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
மெக்சிகோவில் பிரிட் சுற்றுலா விடுதியில் நைட் கிளப் செயல்பட்டு வருகிறது. அந்த கிளப்பில்'பி.பி.எம். இசை திருவிழா' என்னும் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் ஆரவாரமாக அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.

அப்போது அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயமடைந்தார்கள்.
இங்கு துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் அந்த இடத்தின் அருகில் உள்ள வேறு சுற்றுலா விடுதிக்கும் சென்று இதே போல துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Caos en las calles de playa del carmen. NO SALGAN. Chaos on the streets. STAY SAFE. #blueparrot #bpm pic.twitter.com/ZHJZRq7PD3
— Pipe Llorens (@pipellorens) January 16, 2017












Click it and Unblock the Notifications