வெள்ளத்தில் மிதந்த “நியூ இயர்” - கலங்கிப் போய் நிற்கும் அமெரிக்கா!
நியூயார்க்: அமெரிக்காவின் பல பகுதிகளில் புயல்காற்றுடன் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்ததுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் பொங்கல் வைத்து விட்டது.
குறிப்பாக இங்குள்ள மிசவுரி, ஓக்லஹாமா, இலினாய்ஸ், மிஸிஸிப்பி உள்ளிட்ட பல பகுதிகளில் 30 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ததால் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஆறான மிஸிஸிப்பி போன்ற முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

கடந்த இருபது ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சுமார் 47 அடி உயரத்துக்கு மிஸிஸிப்பி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருகின்றது. இதனால், இந்த ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் வசிக்கும் சுமார் ஒரு கோடி மக்கள் வெள்ள அபாயத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
எப்போதும் புத்தாண்டுக்கு முன் தினத்தில் பொலிவுடன் காணப்படும் அமெரிக்காவின் பல நகரங்கள் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தின் விளைவாக களையிழந்து காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications