காலில் பாய்ந்த தோட்டா.. கொஞ்சம் கூட உணராத அமெரிக்கப் பெண்
புளோரிடா: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காலில் துப்பாக்கியால் சுட்டும் கூட அவருக்கு அதுகுறித்த உணர்வு ஏற்படவில்லை. டாக்டர்கள் சொல்லித்தான் அவர் தனது காலில் துப்பாக்கியால் சுடப்பட்டதை தெரிந்து கொண்டார்.
புளோரிடாவைச் சேர்ந்தவர் ஹீதர் சார்ல்பாயஸ். இவர் அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி ஒரு கபேக்குச் சென்றிருந்தார். டெலான்ட்டில் உள்ள காப் டி வின்சி என்ற காபிக் கிளப்பில் காபி அருந்தியுள்ளார்.
எங்கிருந்தோ வந்த தோட்டா
அப்போது காலில் ஒரு தோட்டா வந்து பாய்ந்துள்ளது. அது எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
தெரியலையே
ஆனால் தனது காலில் தோட்டா பாய்ந்ததை உணரவில்லை ஹீதர். மாறாக காபி சாப்பிட்டு விட்டு கிளம்பி வீட்டுக்குப் போய் விட்டார்.
5 நாள் கழித்து வந்த வலி
5 நாட்கள் கடந்த நிலையில் அவரது காலில் வலியை உணர்ந்தார். இதையடுத்து டாக்டரிடம் போனபோது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உள்ளே தோட்டா இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டது.
என்னது தோட்டாவா
தனது காலில் தோட்டா பாய்ந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் ஹீதர். தன்னால் எதையுமே அப்போது உணர முடியாமல் போனது எப்படி என்று அவர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார்.
நல்லவேளையாப் போச்சு
ஹீதர் காலில் பாய்ந்த தோட்டா .38 காலிபர் ரக துப்பாக்கி் தோட்டாவாகும். நல்லவேளையாக ஹீதர் காலுக்கு வேறு பெரிய ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.