போச்சே.. 3 வருட சிறையால் வந்த சிக்கல்.. 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட இம்ரான் கானுக்கு விழுந்த தடை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கருவூல மோசடி வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை விதித்த நிலையில் அவர் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் வரும் நவம்பரில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்ரான் கான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். கடந்த முறை பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து பிற கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைத்து பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நில மோசடி, கருவூல மோசடி என அவருக்கு எதிரான பல்வேறு புகார்கள் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் பிரதமராக இருந்தபோது அவர் தனக்கு வந்த பரிசு வாட்ச், பேனா உள்பட பல்வேறு பரிசு பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 5ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கருவூல முறைகேடு வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து இம்ரான் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது தகுதி நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் சிறை தண்டனையால் இம்ரான் கான் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானை பொறுத்தமட்டில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில் தான் தற்போதைய இந்த உத்தரவு அவரையும், அவரது கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க இம்ரான் கான் தரப்பில் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்பட்டு தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications