யு.எஸ்.: முன்னாள் தீயணைப்பு படை வீரருக்கு வெற்றிகரமாக நடந்த முகமாற்று அறுவை சிகிச்சை
யு.எஸ்.: முன்னாள் தீயணைப்பு படை வீரருக்கு வெற்றிகரமாக நடந்த முகமாற்று அறுவை சிகிச்சை
மிசிசிப்பி: அமெரிக்காவில் தீ விபத்தில் முகம் கருகிப் போன முன்னாள் தீயணைப்பு வீரருக்கு வெற்றிகரமாக முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தைச் சேர்ந்தவர் பாட்ரிக் ஹார்டிசன்(41). முன்னாள் தீயணைப்பு படை வீரர். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி செனடோபியா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்து பாட்ரிக் உள்ளிட்ட வீரர்கள் அங்கு சென்றனர்.
தீ விபத்து நடந்த இடத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற அவர்கள் போராடினர். அப்போது பாட்ரிக் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தீயில் அவர் அணிந்திருந்த மாஸ்க் உருகி அவரது முகத்தில் ஒட்டியது.
இந்த விபத்தில் அவரது முகம் அகோரமானது, கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. உதடுகள், மூக்கு, கண் இமைகள் சேதம் அடைந்தது. 63 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவரை பார்த்து அவரது 3 குழந்தைகளும் பயந்தனர். இந்நிலையில் ப்ரூக்ளினில் மூளைச் சாவு அடைந்த டேவிட் ரோட்பாக்(26) என்பவரின் முகத்தை தானமாக வழங்க அவரது தாய் சம்மதித்தார்.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் பாட்ரிக்கிற்கு டேவிட்டின் முகத்தை பொருத்தும் முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சையில் அவர் உயிர் பிழைக்க 50 சதவீதம் தான் வாய்ப்பு உள்ளது என்று கூறியும் அறுவை சிகிச்சைக்கு அவர் ஒப்புக் கொண்டார்.
நல்லவேளையாக அவர் உயிர் பிழைத்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக உள்ளார். அவரால் தற்போது கண் இமையை மூடி தூங்க முடியும்.
-
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications