For Daily Alerts
Just In
விசா விதிமீறல்: இலங்கையில் ஆடை விற்பனை செய்த 4 இந்தியர்கள் கைது
கொழும்பு: விசா விதிமீறல் காரணமாக இலங்கையில் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதியில் விசா விதிமீறல் காரணமாக போலீசார் நான்கு இந்தியர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து மருத்துவ குணம் வாய்ந்த எண்ணெய் மற்றும் சில மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த நான்கு பேரும் இலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதியில் துணி விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English summary
At least four Indians have been arrested in Sri Lanka's eastern province for allegedly abusing visa conditions, police
Story first published: Sunday, August 23, 2015, 16:02 [IST]