நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்- கட்டிடங்கள் இடிந்து விழுந்தன- ரிக்டரில் 6.2 ஆக பதிவு
காத்மாண்டு: நேபாளத்தை இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் வட இந்திய மாநிலங்களும் குலுங்கின.
நேபாள நாட்டில் இன்று பிற்பகல் 2.25 மணிக்கு முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக சிறிது நேரத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. தொடர்ந்து 4 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் குவிந்தனர்.

இந்த நிலநடுக்கமான தரையின் மையப்பகுதியில் இருந்து வெறும் 5 கிமீ ஆழத்தில்தான் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேபாளத்தின் Bajhang மாவட்டத்தில்தான் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் நெடுஞ்சாலைகளில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மொத்தம் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேபாள நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நமது நாட்டின் வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. டெல்லி, ஹரியானா உள்ளிட இடங்களில் மிக கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன. உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்தியாவின் அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயா மாநிலத்தின் காரோ மலைக்குன்று பகுதிகளில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவானது.
உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இடத்தில் நேபாளம் உள்ளது. இது தொடர்பாக புவியியல் விஞ்ஞானிகள் ஏற்கனவே நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கமானது உலகையே உலுக்கி எடுத்தது. சாலைகள் இரண்டாக பிளந்தன. கட்டிடங்கள் அப்படியே நொறுங்கி விழுந்தன. அந்த கோர நிலநடுக்கமானது 8,000 பேரை பலி கொண்டது. 21,000 பேர் படுகாயமடைந்தனர். அப்போது நிலநடுக்கமானது ரிக்டரில் 7.8 அலகுகளாக பதிவாகி இருந்தது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications