நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு - பீகாரிலும் 10 பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று பிற்பகலில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நான்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பிற்பகலில் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவினை மையமாகக் கொண்டு 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டரில் முறையே 7.3, 5.6, 5.5, 6.9 ஆக பதிவான இந்நிலநடுக்கங்களினால் சென்னை மற்றும் வட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உண்டாகின.

நேபாளத்தில் இன்றைய நிலநடுக்கங்களினால் ஏற்கனவே பலி எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில், மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலநடுக்கத்தினால் கிட்டதட்ட 1,000 பேருக்கும் மேலாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நடுக்கத்தின்போது நிலப்பகுதியே 25 நிமிடங்களுக்கு அலை போல் ஆடியதாக புவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 10 பேர் பலியாகியுள்ளனர். இப்பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்பட்டு வருகின்றது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக பீகாரில் முதலில் பகல் 12.36 மணி அளவில் முதல் நிலநடுக்கமும், அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது முறையாக பகல் 1.09 மணி அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள கிழக்கு சாம்பரான், மேற்கு சாம்பரான், மதுபானி, சுபால் உள்ளிட்ட இடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே போன்று மேற்கு வங்காளத்தில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்திய ராணுவத்தினரின் 11 மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் சாரிகோட் மற்றும் லாமாபாகர் கிராமங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக இந்திய விமானப் படை விமானம் ஒன்று அவசரமாக நேபாளம் விரைந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications