உயிரிழந்த பிஞ்சுகளின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம்.. உலுக்கிய பெற்றோரின் கதறல்!
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 141 மாணவ மாணவியர், ஆசிரியர்களின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன. பெஷாவர் முழுவதும் சோகமும், கதறலுமாக உள்ளது.
இறந்தவர்களில் 132 பேர் மாணவ மாணவியர் ஆவர். இவர்களுக்கு 12 முதல் 16 வயதுக்குள்தான். 9 பேர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள்.
இந்த கொடும் தாக்குதலில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவியர் ஆவர்.

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 132 மாணவ, மாணவிகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உடனுக்குடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்றிரவே பெரும்பாலான உடல்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது. சில மாணவர்கள் முகம் சிதைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலையில் இருந்து பலியான மாணவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சில இடங்களில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து குழிகள் தோண்டி மொத்தமாக மாணவர்கள் உடல்கள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
இதனால் பெஷாவர் நகரமே சோகமாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் அழுகையும், வேதனையுமாக மக்கள் உள்ளனர். இந்த சம்பவம் இது பெஷாவர் நகர மக்களிடம் ஆழ்ந்த இரங்கலை ஏற்படுத்தியது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications