கே லவ்வரை உயிருடன் கடித்து, ருசித்துச் சாப்பிட்ட ஜெர்மனிக்காரர் !
பான்: ஜெர்மனியில் நர மாமிசம் சாப்பிடும் 42 வயது நபர், தனது ஓரினச் சேர்க்கைக் காதலருடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர் அவரை அப்படியே உயிருடன் கடித்துக் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பயங்கர நபரின் பெயர் அர்மின் மெய்வஸ். 42 வயதாகும் இவர் தனது ஓரினச்சேர்க்கை காதலரை உயிருடன் கடித்துச் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். மேலும் அவரது உடலின் ஒரு பகுதியை ரோஸ்ட் செய்தும் இவர் சாப்பிட்டுள்ளார்.

இவரால் கொல்லப்பட்ட நபரின் பெயர் பெர்ன்ட் பிரான்டஸ். 2001ல் இவரை உயிருடன் சாப்பிட்டுள்ளார் அர்மின். இவர் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர் ஆவார். முன்பு, தன்னை உயிருடன் சாப்பிடக் கூடிய திறமை படைத்த நர மாமிசம் சாப்பிடுவோர் தாராளமாக முயற்சித்துப் பார்க்கலாம் என்றும் பீதியைக் கிளப்பும் விளம்பரத்தைதப் போட்டிருந்தவர் ஆவார்.
இந்த நிலையில் தற்போது அவர் புதிய பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில்தான் தான் பிராண்டஸை உயிருடன் சாப்பிட்ட சம்பவத்தை அர்மின் நினைவு கூர்ந்துள்ளார்.
சிறந்த டின்னர்...
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எனது டேபிளை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்திருந்தேன். அதுதான் எனது மிகச் சிறந்த டின்னர். அவருடைய முதுகிலிருந்து எடுத்த சில பகுதிகளை வைத்து ரோஸ்ட் செய்திருந்தேன். அருமையான டேஸ்ட் கொண்டவை அவை.
வினோதமான சுவை...
எனது முதல் கடியை என்னால் மறக்க முடியாது. மிக வினோதமாக இருந்தது. அதேசமயம், சுவையாக இருந்தது. அதை என்னால் விவரிக்க முடியாது. அத்தனை ஆண்டுகளாக நான் வாழ்ந்ததே இதுபோன்ற தருணத்திற்காகத்தான்.
மாட்டுக்கறி போல்...
அவரது மாமிசம் மாட்டுக் கறி போன்ற சுவையுடன் இருந்தது. ஆனால் புதுமையான டேஸ்ட்டாகவும் தெரிந்தது என்று கூறியுள்ளார் இவர். இந்த பேட்டி விரைவில் Docs: Interview with a Cannibal என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
வீடியோ பதிவு...
பிரான்டஸ்டுன் சம்பவத்தன்று இரவு முதலில் செக்ஸ் கொண்டுள்ளார் அர்மின். பின்னர் அவருக்கு மதுவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து மயங்க வைத்துள்ளார். அதன் பின்னர் முதலில் கழுத்தைக் கடித்துக் கொன்றுள்ளார். பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதை வீடியோவிலும் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது...
பிறகு தலையைத் துண்டித்து தோட்டத்தில் புதைத்துள்ளார். உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்து அவ்வப்போது எடுத்து சாப்பிட்டுள்ளார். 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது செக்ஸ் திருப்திக்காக கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எட்டு வருட சிறைத் தண்டனையும் தரப்பட்டது.
சைவம்...
என்ன வேடிக்கை என்றால் சிறைத் தண்டனை சமயத்தில் சிறையில் இருந்தபோது இவர் சுத்த சைவமாக மாறி விட்டார் என்பதே.












Click it and Unblock the Notifications