ஜெர்மனியில் திரையரங்க வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: ஜெர்மனியில் திரையரங்க வளாகம் ஒன்றில் நுழைந்து மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஜெர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு கட்டிடத்திற்குள் முகமூடி அணிந்து நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். இதில் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து திரையரங்க வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்னர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. எனினும் உயிரிழந்தோரின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications