கடவுள் தான் நம்மை இனி காப்பாத்தனும்.. இந்தியா உடனான மோதலால் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் புலம்பல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவின் தாக்குதல் மற்றும் போர் நடவடிக்கையில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் அவர் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர் கப்பல்களை நம் நாடு தயாராக வைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பலத்த பதிலடியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் இதுவரை இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு நம் படை வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தான் அஞ்சி நடுங்கி வருகிறது. இந்தியா தாக்கினால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம். இந்தியாவை கண்டு பயப்படமாட்டோம் என்று தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சர்கள் கூறி வந்தாலும் கூட அவர்கள் மரண பயத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் இந்தியாவின் தாக்குதலில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இது ராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்து இருப்பதை காட்டும் வகையில் உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது:
‛‛இந்தியா உடனான மோதலுக்காக வாய்ப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் ஏற்படாமல் இருக்க நம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் இந்தியா உடனான மோதல் என்பது குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலைமையை தவிர்க்க பல நாடுகள் முயற்சி மேற்கெண்டு வருகின்றன'' என்று கூறினார். இப்படி இந்தியாவுடனான மோதலுக்கு பயந்து, சொந்த ராணுவத்தினர் மீது நம்பிக்கை இல்லாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛இந்தியா எல்லையில் தொடர்ந்து விதிமீறல் செய்யும்போது அதற்கு ஏற்ப உரிய பதிலடியை நாம் கொடுப்போம். இந்த பதிலடி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். தற்போதைய காஷ்மீர் தாக்குதல் குறித்து சார்பு இல்லாத நியாயமான சர்வதேச விசாரணையை நாங்கள் கோருகிறோம்'' என்றார். இதன்மூலம் சண்டை வேண்டாம். விசாரணை மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து












Click it and Unblock the Notifications