மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகளாக்க முடியும்... ஆச்சர்யம் தரும் கூகுள் ஆய்வு
கலிபோர்னியா: மனிதர்களின் ஆயுளை அதிகப்பட்சமாக 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூகுளின் புதிய ஆய்வுகளுக்கான தலைமை அதிகாரி பில்மார்ஸ் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனமானது தகவல் தொழில்நுட்ப துறை தவிர மற்ற பிற துறைகளிலும் பெரும் முதலீடுகளை செய்து ஆய்வுகள் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மரபணு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிப்பது அதாவது முதுமையை தடுக்கும் துறைகளில் கூகுள் தனிக்கவனம் செலுத்தி ஆராய்ந்து வருகிறது.

இந்த ஆய்வுகளை பில்மார்ஸ் என்ற அதிகாரி தலைமை ஏற்றி நடத்தி வருகிறார். இவர் தங்களது ஆய்வு தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘மனிதர்களின் வாழ்நாட்களை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். சாவை தடுக்க முடியாது. ஆனால், கண்டிப்பாக நீண்ட நாட்கள் வாழ வைக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
மனிதனின் ஆயுளை நீட்டிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனிதர்களின் ஆயுளை 120 ஆண்டுகள் வரை நிச்சயமாக நீட்டிக்கலாம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூகுள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications