கேன்சர், மாரடைப்பு அறிகுறிகள் கண்டறியும் 'நானோ மாத்திரைகள்- கூகுளின் புதிய ஆய்வு!
சான் பிரான்சிஸ்கோ: உலகப் புகழ்பெற்ற நிறுவனமான கூகுள் மனித உடலில் மாரடைப்பு, புற்றுநோய் அறிகுறிகளை கண்டறிய புதிய முறையை பரிசோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுள் எக்ஸ் ஆய்வகத்தில் அறிவியல் குழுவினர் இந்த புதிய பரிசோதனையினை செய்து வருகின்றனர்.
அவர்கள் நானோ துகள்களின் உதவியோடு மனித உடலினுள் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்பை சென்ஸார்கள் மூலம் தெரியப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து வருகின்றனர்.

முதற்கட்ட ஆய்வில் கூகுள்:
இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள தகவலில், "இந்த பரிசோதனை முதற்கட்ட ஆய்வில் உள்ளது. ஆனால், நாங்கள் பல சோதனைகளை வெற்றிகரமாக செய்துள்ளதால் இதனை தொடந்து நடத்த இருக்கிறோம்.
நோயின் தாக்கம் கண்டறியும் சிகிச்சை:
இந்த தொழில்நுட்பம் இதய ரத்த குழாயில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா அல்லது கீமோதெரபி சிகிச்சைக்கு பின் புற்று நோய் பரவுகிறதா எனக் கண்டறிந்து, நோயின் தாக்கத்தை துவக்கத்திலேயே தடுத்து வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க வழிவகுக்கும்.
மாத்திரை வடிவ நானோ துகள்கள்:
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காந்த தன்மை கொண்ட நுண்ணிய நானோ துகள்கள் மாத்திரை வடிவில் உடலுக்குள் செலுத்தப்பட்டு, அவை ரத்தத்துடன் கலந்ததும் ரத்தத்தில் புற்றுநோய் போன்ற ஏதேனும் பாதிப்பு இருந்தால் அந்த செல்களுடன் ஒட்டிக்கொள்ளும்.
துளையில்லா சிகிச்சை:
நானோ துகள்களின் காந்த தன்மை அதனை சென்சாருக்கு அருகே கொண்டு சேர்த்த பின்னர் ஒளி அல்லது ரேடியோ அலைகள் போன்ற துளையில்லாமல் கண்டறியும் முறையை பயன்படுத்தி நோய் தாக்கத்தை அறிய இயலும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications