உன் தலையில தீயை வைக்க என்பது இதுதான் போல!
நண்பர்களுடன் பேசும் போது ஒருவரின் நம்பிக்கைக்கு எதிரான நாம் பேசினால் அந்த நண்பர் உன் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்ட என்று நம்மை திட்டுவார். ஆனால் நிஜமானால் எவ்வாறு இருக்கும்?
கராச்சி: முடிதிருத்தும் கடை ஒன்றில் கத்தரிக்கு பதிலாக நெருப்பை கொட்டி வெட்டினால் எப்படி இருக்கும்? ஆம் பாகிஸ்தானில்தான் அப்படி ஒரு டெரர் கடை இருக்கு.
ஒரு காலத்தில் பெண்களுக்கு மட்டுமே பியூட்டி பார்லர்கள் இருந்தன. அங்கு அவர்களுக்கு மட்டுமே முடி திருத்தம், பேஷியல், அழகுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை செய்வர். ஆனால் இன்றைய காலகட்டங்களில் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் பியூட்டி பார்லர்கள் வந்துவிட்டன.
அங்கு அவர்களுக்கு முடிதிருத்துவதுடன் மசாஜ் செய்வது, பேஷியல் செய்வது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் ஒருவருக்கு முடிதிருத்த வாங்கும் கட்டணத்தில் நமது பெற்றோர் 10 முறை தங்கள் முடிகளை திருத்தியிருப்பர். சரி அது போகட்டும், விஷயத்துக்கு வருவோம்.

நெருப்பினால் முடிதிருத்தம்
முடிதிருத்தும் கடைகளில் கத்தரிகளால் முடிதிருத்துவதை கண்டிருப்பீர்கள். ஆனால் நமது எதிரி நாடான பாகிஸ்தானில் நெருப்பை கொண்டு முடிதிருத்தும் தொழிலில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆண்கள் விரும்பும் ஸ்டைலில் முடி திருத்திக் கொள்ளலாம் என்கிறார் அந்த முடிதிருத்தும் நிபுணர் ஷாப்குவாத் ராஜ்புட்.

பாதுகாப்பானது
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நெருப்பை கொண்டு முடியை கட் செய்வதால் வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணத்தில் முடியை திருத்திக் கொள்ள முடியும். இதனால் இதுவரை யாருடைய தலைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாதாம்.

சேதமடையாது
இதுபோன்று நெருப்பை கொண்டு திருத்துவதால் முடி சேதமடையாது. நெருப்பு எரியும் ஆனால் அதை வாடிக்கையாளர்கள் உணர்ந்ததில்லை. அந்த அளவுக்கு இது இருக்கும். இதை நானே கற்றுக் கொண்டேன். இதை எவ்வாறு செய்வது என்பதை கூற இயலாது.
மெல்லிய முடிகளுக்கு கூடாது
இந்த நெருப்பு டெக்னிக்கை. அடர்ந்த முடிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மெல்லிய முடிகளை கொண்டுள்ளோருக்கு இந்த முறையை பயன்படுத்தினால் நெருப்பின் தாக்கத்தை உணர்வர். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் என் கடைக்கு வருவதற்கு பயந்தனர். பின்னர் இந்த முறை மூலம் முடிதிருத்தும் வாடிக்கையாளர்களின் முடியை கண்டும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டும் என் கடைக்கு வருகின்றனர் என்கிறார் அந்த பாகிஸ்தான் நாட்டு முடிதிருத்தும் கலைஞர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications