வழுக்கைக்கு குட்பை: முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யும் பாகிஸ்தானியர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆண்களுக்கு வழுக்கை தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் தாலிபான்களின் பதுங்கு இடங்கள் அதிகம். அந்நகரின் தூசு படிந்த தெருக்களில் தாடியுடன் செல்லும் ஆண்களை பார்க்க முடியும். தற்போது அந்த நகரத்தின் சாலைகளில் வழுக்கையாக இருந்து முடிமாற்று அறுவை சிகிச்சையால் வசீகரமாக ஆகிய பிரபலங்களின் போஸ்டர்களை தான் பார்க்க முடிகிறது.

இது குறித்து மருத்துவமனை ஒன்றில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வந்த ஒருவர் கூறுகையில்,
என் உறவினர் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து அசத்தலாக வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நானும் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்று அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன். சமூகத்திற்கு எதிரான ஒரு ஆயதம் தான் முடி என்றார்.
தாலிபான் தீவிரவாதிகள் கூட தங்கள் தலைமுடி, தாடிக்கு என்று சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். பாகிஸ்தானில் ஆண்களுக்கு முடி இருந்தால் அது வீரயத்தை குறிக்குமாம். 8 ஆண்டுகளுக்கு முன்பு முஷாரப்பால் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தபோது தலை நிறைய முடியுடன் இருந்தார்.
வழுக்கையான நவாஸ் ஷெரீப் தலையில் மறுபடியும் முடியை பார்த்தபோது தான் பாகிஸ்தானியர்களுக்கு முடிமாற்று அறுவை சிகிச்சை மீது மோகம் ஏற்பட்டதாம்.












Click it and Unblock the Notifications